மா ஓயாவில் நீராடசென்ற நான்கு சிறுவர்கள் நீரிழ்மூழ்கி பலி!

அல்வாவில் மா ஓயாவில் குளித்த பாடசாலை சிறுவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது ஐந்து சிறுவர்கள் கொண்ட குழு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காவல் துணைக் கண்காணிப்பாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இவர்களில் ஒரு சிறுவன் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், ஏனைய நால்வரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொல்கஹவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின்  தரம் 9இல் கல்விகற்கும்  மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply