அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்!

அநுராதபுரத்தில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் இருந்த இரு கைதிகள் இன்று (29) பிற்பகல் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

ஆதாரங்களின்படி, இருவரும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட சிறைச்சாலை கேண்டீனில் வேலை செய்து வந்தனர்.

இருவரும் தங்களின் சிறைச் சீருடைகளை களைந்துவிட்டு தப்பிச் செல்ல சிவில் உடைகளை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்ய அனுராதபுரம் பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஒரு கைதி  அனுராதபுரத்தில் உள்ள ஸ்ரவஸ்திபுரத்தையும் மற்றையவர் களனியையும் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply