மணியம் தோட்ட பகுதியில் கூறுவிலை மண்டபம் அமைக்க நடவடிக்கை! அமைச்சர் டக்லஸ் தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் கடலுணவு விற்பனை செய்வதற்கான கூறு விலை மண்டபம் ஒன்றினை அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன் என அப்பகுதி மக்களுக்கு கடற்தொழில் அமைச்சர் உறுதி வழங்கியுள்ளர்.

மணியம்தோட்டம் கடற்றொழிலாளர் சங்கத்தினரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த  பிரதேசத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடல்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் எதிர் பார்ப்புக்கள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

குறிப்பாக பிரதேசத்தில் கடல்றொழிலாளர் நன்மை கருதி கடலுணவுகளை விற்பனை செய்வதற்கு ஓர்  கூறுவிலை மண்டபம் ஒன்றினை அமைத்து தருமாறு கோரிக்கை முன்வைத்தனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார் .

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply