போதைப்பொருள் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை!

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இந்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று  வழங்கினார்.

சந்தேகநபர்  329 கிராம் ஹெரோயினுடன் 2019 ஆகஸ்ட் 19 அன்று மஹரகம வத்தேகெதர பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் இருந்த ஹெரோயினின் நிகர எடை 6.17 கிராம் என அரச பகுப்பாய்வாளர் தெரிவித்திருந்தார்.

குறித்த சந்தேகநபர் மீதான   குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த நபருக்கு  ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply