பண்டிகை காலத்தில் அரச பணியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறையை முன்னிட்டு கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி சபையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த  காலப்பகுதியில் அனைத்து பிரதேச செயலாளர்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி பிரதேச செயலாளர்கள் உட்பட அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்து அக்காலப்பகுதியில் தேவையான நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பேரிடர் மேலாண்மை மற்றும் பிற அவசரநிலைகளை தேவைக்கேற்ப சமாளிக்கவும் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் தடையின்றி தொடர்வதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடைமுறைகளை இந்த விடுமுறைக் காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply