தேசிய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெறுதல் நீடிக்கப்பட்டுள்ளது!

தேசிய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் ஏப்ரல் 10 ஆம் திகதிவரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட கல்வி அமைச்சு, அதன்படி, மாணவர்கள் 2021 மற்றும் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தேசிய கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை உரிய விண்ணப்பங்களை சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், தமது விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்வதற்கு ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் ஏப்ரல் 17 ஆம் திகதி நள்ளிரவு வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply