பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

பெருந்தொகையான போதைப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 31 வயதுடைய நபர் ஒருவர் நேற்றைய தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 30 கிலோகிராம் போதைப்பொருளை கொண்டு சென்ற போது பண்டாரவத்தை பகுதியில் வைத்து பியகம காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட பொருட்களில் 15 கிலோகிராம் ஐஸ், 14 கிலோகிராம் ஹாஷ் மற்றும் 941 கிராம் ஹெரோயின் இருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் கடுவெல பொமிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply