சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் கிராமசேவை உத்தியோகத்தர்கள்!

பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்று (06) மற்றும் நாளை (07) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கடமைகளில் இருந்து விலகி சுகயீன விடுமுறையை அறிவிக்கவுள்ளதாக அகில இலங்கை கிராம சேவை உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெகத் சந்திரலால், கிராம சேவை உத்தியோகத்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அமைச்சரவைக் கூட்டத்தில் அவர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய கவனம் செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply