தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினரின் மகன் கைது !

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி, தனது வாகனம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள பாடசாலைப் பாதையில் குறித்த நபரை வாகனத்தில் மோதியதன் பின்னர், ஒருவரைத் தாக்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் மகனான நௌசர் பௌசி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply