40 மில்லயன்ரூபா பெருமதியான தங்க ஜெல்லினை கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது!

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 40 மில்லியன் ரூபா பெருமதியான  கிட்டத்தட்ட 2 கிலோகிராம் எடையுள்ள ‘தங்க ஜெல்’ உடன் பயணி ஒருவரை கைது செய்துள்ளனர்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 25 வயதுடைய இளைஞர் எனவும் இன்று (9) காலை 8.30 மணியளவில் எமிரேட்ஸ் எயார்லைன் விமானத்தில் டுபாயிலிருந்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் தனது காலணிகள் மற்றும் உள்ளாடைகளில் தங்க ஜெல் அடங்கிய மூன்று பொதிகளை மறைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட தங்க ஜெல்லின் மொத்த எடை 1,975 கிராம் என்றும் அதன் மதிப்பு  40 மில்லியன் ரூபா என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply