பதுளை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! நால்வர் படுகாயம்!

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் புவக்கொடமுல்ல கைலாகொட பகுதியில் இன்று இ.போ.ச. பஸ்ஸும் ஓட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த ஓட்டோ, வீதியின் குறுக்கே பாய்ந்த நாய் ஒன்றைப் பாதுகாக்க முற்பட்டபோது, சரிபுரவில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் ஓட்டோவில் பயணித்த 79 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார் எனவும், ஓட்டோவில் பயணித்த பெண்கள் இருவர்  உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இ.போ.ச. பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பதுளை தலைமையகப் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply