
ஈஸ்டர் ஞாயிறு அன்று தீவிரவாத தாக்குதல் நடத்தப் போவதாக புலனாய்வுத் தகவல் கிடைத்தும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மனு இன்று சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
இதன்போது, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு திகதி வழங்குமாறு பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்தபோது , உரிய ஆட்சேபனைகளை ஜூன் 25 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் ஜூட் ரொஹான் சில்வாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.