வௌ்ள அபாய எச்சரிக்கை- நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு!

அத்தனகலு ஓயாவிற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படும் அதேவேளை அந்த பகுதிகளில் உள்ள வீதிகள் மற்றும் கிளை வீதிகளில் பயணிக்கும் போது பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய , களுகங்கையில் குடா கங்கைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply