ஹம்பாந்தோட்டையில் 9 வயது சிறுவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்!

ஹம்பாந்தோட்டையில் 14 வயது சிறுவன் ஒருவன் 9 வயது சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தானும் விஷம் குடித்ததில் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறித்த சம்பவம் ஹம்பாந்தோட்டை – அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.

இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில் 9 வயதுடைய சிறுவனின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

9 வயதுடைய சிறுவனின் உடலில் 6 அல்லது 7 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 வயது சிறுவன் வீடியோ கேம்களுக்கு கடுமையாக அடிமையாகியதோடு குறித்த சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று 9 வயதுடைய சிறுவனின் வீட்டில் பணம் திருடப்பட்டமை தொடர்பில் 14 வயது சிறுவனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மேலும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply