யாழ் கல்லூரியில் இடம்பெற்ற சர்வதேச மாணவர் உளவியல் செயலமர்வு!

கடந்த வெள்ளிக்கிழமை யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஒழுங்குபடுத்தலில் ஆசிய பசுபிக் பாடசாலைகள் உளவியல் அமைப்பு இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த செயலமர்வில் யாழ் மாவட்ட குரு முதல்வர் உட்பட மலேசியா, இந்தியா, சிங்கப்பூர்,பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர்களும் , விரிவுரையாளர்களும் பல நூறு மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலையில் புத்தகக் கல்வி சுமையாக இருக்கும் உயர்தரப் பிரிவு மாணவர்கள் வாழ்க்கையின் யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு தம் வாழ்வை சரியான முறையில் நெறிப்படுத்தவும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் குறித்த செயலமர்வின் ஊடாக மாணவர்கள் வழிகாட்டலைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply