எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு விசாரணை தொடர்பில் உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து தொடர்பில் கப்பலின் கெப்டன் மற்றும் உள்ளூர் பிரதிநிதி நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உள்ளூர் பிரதிநிதி நிறுவனமான சீ கன்சார்டியம் லங்கா கம்பனியின் பணிப்பாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சட்டவிரோதமானது எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனு ஏ.எச்.எம்.டி. நவாஸ், குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பிப்ரவரி 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply