நீரில் மூழ்கி பலியான இருவர்!

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெதுரு ஓயாவில் நேற்று (14) மாலை நீராடச் சென்றவர்களில் இருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கிய ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும், மற்றைய நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞன் தனது மனைவி மற்றும் 3 பேருடன் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து , கட்டுகஸ்தோட்டை மடவளை வீதியில் மகாவலி கங்கையின் நீராடும் பகுதிக்கு அருகில் நேற்று (14) இரவு ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டது.

குறித்த சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply