தலவாக்கலையில் மாயமான சிறுவர்கள் – தேடுதல் வேட்டையில் பொலிஸார்!

தலவாக்கலை – கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை(14.07.2024) மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர்.

இதன்போது, முரளிகிருஷ்ணன் லக்சிக்கா (வயது 16), ராஜகுரு மிதுஷா (வயது 16), சுந்தர்ராஜ் தர்ஷினி (வயது 16), சிறுவன் ராஜகுரு கோபிசாகர் (வயது 15) ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(14) மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் வீடு திரும்பாத நிலையில் அவர்களின் பெற்றோர்களால் நேற்று (15) தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு 0764612289, 0771546724 தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் மற்றும் பெற்றோர்கள் உதவி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply