யாத்திரைக்கு சென்ற பேருந்து விபத்து – 64 பேர் வைத்தியசாலையில்!

மூதூரில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் தனியார் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 51 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து மூதூர் – கெங்கே பாலத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பஸ்ஸில் பயணித்த பயணிகள், சாரதி உட்பட 51 பேர் காயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரிகர்கள் குழுவொன்றை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply