மீட்கப்பட்ட கைக்குண்டு- தேடுதல் பணியில் பொலிஸார்!

காத்தான்குடியில் பூநொச்சிமுனையில் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான வீடு ஒன்றுக்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் முன்பாக உள்ள வடிகான் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை நேற்று முன்தினம் மாலை (21) இரவு கண்டுபிடித்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பூநொச்சிமுனையில் பச்சை வீட்டுத்திட்டம் என அழைக்கப்படும் முகைதீன் ஜூம்ஆ பள்ளி வீதியில் வீடு ஒன்றின் முன்னால் உள்ள வடிகானுக்கு அருகில் கைக்குண்டு ஒன்று கிடப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற அதேவேளை இந்த கைக்குண்டு மீட்கப்பட்ட வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டின் மீது கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இனந்தெரியாதேரால் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, நேற்று காலை முதல் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள வீடுகளில் பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply