நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று (02) பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணியை ரோகித் ஷர்மா வழிநடத்தவுள்ளார்.
இவரைத் தவிர டி20 தொடரைப் பிரதிநிதித்துவப்படுத்தாத விராட் கோலி, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இணைந்த பிறகு நடைபெறும் முதல் ஒருநாள் தொடர் இதுவாகும்.

இதன்போது இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும் .

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply