கோர விபத்தில் துண்டாகிய இளைஞரின் பாதம்!

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவரது கால் பாதம் துண்டாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டியின் கால் , மோட்டார் சைக்கிளின் செயினுக்குள் அகப்பட்டு பாதம் துண்டாகியுள்ளது.

இதனையடுத்து காயப்பட்டவரையும் துண்டாப்பட்ட பாதத்தினையும் அவ்விடத்தில் இருந்தவர்கள் மீட்டு யாழ் .போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், விபத்து தொடர்பில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply