
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் நேற்று (15) இரவு விபத்து ஒன்று இடம்பெற்றதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், பெரியவிளான் பத்திரிமா தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் 76 வயதுடைய நபராவார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, தனியார் பஸ் ஒன்று தனது சேவையை முடித்துவிட்டு சென்றுகொண்டிருந்த வேளை பெரியவிளான், பத்திரிமா தேவாலயத்திற்கு அருகாமையில் வீதியில் நின்றுக்கொண்டிருந்த தந்தை, மகன் ஆகிய இருவர் மீதும் மோதியுள்ளது.
இரவு 9.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி தந்தை உயிரிழந்துள்ளதோடு மகன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பஸ்ஸின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.