இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! மூவர் பணி இடைநிறுத்தம்

இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று (15) காலை பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் செல்லவிருந்த ரஜரட்ட ருஜின ரயில், பெலியத்த ரயில் நிலையத்தில் தவறான பாதையில் பயணித்ததால் சாகரிகா ரயிலுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மூன்று ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துணைப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே குறிப்பிட்டதோடு, குறித்த ரயில்களுக்கு பதிலாக மாற்று ரயில்களை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply