உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றாக இணைந்து களமிறங்க தயாராகும் கட்சிகள்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல ஒன்றிணைந்து, ஐக்கிய மக்கள் கூட்டணியின் தொலைபேசி சின்னத்தின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த தினங்களில் இது தொடர்பில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான குழு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதுடன், சஜித் பிரேமதாசவின் தலைமையின் கீழ் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கவும் இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சஜித் மற்றும் ரணில் கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியுடனான கலந்துரையாடல்களின் போது அடிப்படை உடன்பாட்டை எட்டியதாக ஐக்கிய மக்கள் சக்திகளின் பொதுச் செயலாளர் அண்மையில் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply