
இந்த வருடம் வரவுசெலவுத்திட்டத்தில் யாழ்ப்பாண பொது நூலகத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டமைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நிதியின் ஒரு பகுதியை நூலக சேகரிப்பை டிஜிட்டல் மயமாக்க பயன்படுத்துமாறு கூறிய அவர்,
“எதிர்கால நூலகம் புத்தகங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், நவீன டிஜிட்டல் வளங்கள், கல்விக்கான மெய்நிகர் யதார்த்தம் மற்றும் மாணவர்களுக்கான கூட்டுப் பகுதிகளையும் வழங்க வேண்டும்.
பிற தெற்காசிய நாடுகள் ஏற்கனவே தங்கள் மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
யாழ்ப்பாண நூலகத்தை டிஜிட்டல் மயமாக்குவது கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், டிஜிட்டல் யுகத்திற்கு மாணவர்களை தயார்படுத்துவதிலும் ஒரு முக்கிய படியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.