
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (26) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ள நிலையில், அவரை இன்று கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த நாட்டில் ஒரு ராஜபக்ச எப்போதும் சிஐடிக்கு அழைக்கப்படுகிறார். இது ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது. இன்று, நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் இருப்பதாக எங்களுக்கு சில ஆதாரங்கள் கிடைக்கின்றன. அவர்கள் என்ன திட்டம் வைத்திருக்கின்றார்கள் என்று எங்களுக்குத் தெரியாது” என கூறியுள்ளார்.