
இலங்கையின் குற்றவியல் நீதி அமைப்பில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்து, குற்றவியல் வழக்குகளை விரைவாகக் கையாள்வதை நோக்கமாகக் கொண்டு ஒரு சுயாதீனமான அரசு வழக்கறிஞர் அலுவலகத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு அவசியமான சட்ட கட்டமைப்பை ஆய்வு செய்வதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி யசந்த கொட தலைமையில் தொழில்நுட்ப நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு தற்போதுள்ள சட்டங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய தேவையான திருத்தங்களையும் பரிந்துரைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.