
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ் பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நினைவு தூபி முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள், முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை செய்ததுடன், அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.