‘தடுப்பூசிக்கு பின்னரும் கொரோனா பரவினால்?

தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரும் கொரோனா பரவுவது தொடர்ந்தால், அடுத்தகட்ட நடவடிக்கையை பரிந்துரைப்பதற்காக சிறப்பு மருத்துவ குழுக்களை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, சுகாதார துறை பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 100 சதவீதமும், இரண்டாவது டோஸ் சுமார் 56 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த ஜனாதிபதி, இந்த மாத இறுதிக்குள் கணிசமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதா அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதா அடுத்த முன்னுரிமை என்பதை ஆராய்ந்து கருத்துக்களை முன்வைக்குமாறு சுகாதாரத் துறை பிரதானிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir