யாழ்ப்பாணம் இருபாலையில் கிறிஸ்தவ சபை இல்லத்திலிருந்து 13 சிறுவர்கள் மீட்பு

யாழ்ப்பாணம் இருபாலையில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் சோதனையிடப்பட்டு அங்கிருந்து 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அலுவலர்களினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவ அறிக்கைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம் இருபாலைப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அலுவலகர்கள் இன்று அங்கு சென்று சோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதன்போது குறித்த 13 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். அவர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் அவர்களுக்கு உரியவகையில் உணவு வழங்கப்படவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் கூறினர்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டு மருத்துவ அறிக்கை பெற்றதன் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply