செய்மதித் தொலைபேசியுடன் ஒருவர் கைது!

இலங்கையருக்குச் சொந்தமான செய்மதித் தொலைபேசியுடன் தமிழ்நாடு இராமேஸ்வரம் கடற்கரையில் நடமாடிய ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமேஸவரம் பாம்பன் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் குறித்த நபரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

செய்மதித் தொலைபேசிகள் இந்தியாவில் சாதாரணப் பாவனைக்குத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இயங்கு நிலையிலான தொலைபேசியை வைத்திருந்த சமயமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான இந்தியப் பிரஜை வைத்திருந்த செய்மதித் தொலைபேசியானது இலங்கையர் ஒருவருக்குச் சொந்தமானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட செய்மதித் தொலைபேசியுடன் கொழும்பை முகவரியாக கொண்ட ஒருவரது அடையாள அட்டையும் நீதிமன்றக் கடிதம் எபோன்ற ஆவணங்களையும் தமிழகப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

 

You May Also Like

About the Author: digital

Leave a Reply