இலங்கையில் நேற்றைய தினம் நான்கு புதிய கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்

இலங்கையில் நேற்று (ஏப்ரல் 25) மேலும் நான்கு பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் (DGI) இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

2019 இன் பிற்பகுதியில் தொற்றுநோய் பரவலைத் தொடர்ந்து, நாட்டில் கண்டறியப்பட்ட மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 672,143 ஆகக் காணப்படுகின்றது.

இதில் 655,000 க்கும் அதிகமானோர் தொற்றில் இருந்து மீண்டவர்களாகவும், 16,800 க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் இறப்பைச் சந்தித்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply