தமிழ் மக்களைச் சீண்டி விடுவதுதான் தமிழ்க் கட்சியினரின் அன்றாடத் தொழில்!

தமிழ் மக்களைச் சீண்டி விடுவதுதான் தமிழ்க் கட்சியினரின் அன்றாடத் தொழில், என்று அமைச்சர் பந்துல குணவர்தன குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

நேற்றைய தினம் அனுராதாபுரத்திற்கு வந்த அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தனவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் நாட்டைப் பிளவுபடுத்துவதிலேயே குறியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ் மக்களைச் சீண்டி விடுவதுதான் தமிழ்க் கட்சியினரின் அன்றாடத் தொழில்.
இதனூடாக அவர்கள் தங்கள் சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றார்கள்.

ஹர்த்தால், போராட்டங்கள் மூலம் எதையும் சாதிக்க முடியாது.
தமிழ் மக்களை ஏமாற்றவே இப்படியான போராட்டங்களைத் தமிழ்க் கட்சியினர் நடத்துகின்றனர். ஆனால், அவர்களின் ஆட்டத்திற்கு மற்றவர்களும் ஆட முடியாது, எனவும் அவர் கூறியிருக்கிறார்.

T 03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply