பொலிஸாரைத் தலைக்கவசத்தால் தாக்கிய கடற்படைச் சிப்பாய் உட்பட இருவர் கைது!

நீர்கொழும்புப் பிரதேசக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸார் நேற்றுப் பிற்பகல் சீதுவைப் பகுதியில் வீதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது  அவர்களைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் திருகோணமலை கடற்படை முகாமில் பணிபுரியும் 25 வயதுடைய சிப்பாய் ஒருவரும், சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிவேகமாகச் செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டியபோது, சந்தேகநபர்கள் நிறுத்தாமல் தொடர்ந்தும் பயணித்துள்ளனர். சந்தேக நபர்களைத் துரத்திச் சென்ற பொலிஸார், சீதுவ நகருக்கு அருகில் தடுத்து நிறுத்தியபோது, சந்தேக நபர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைக்காகச் சந்தேக நபர்களைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்ல முற்பட்டபோது, தாம் வைத்திருந்த தலைக்கவசத்தால், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் அவர்கள் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சீதுவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply