செர்பியாவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு; 9 பேர் பலி!

செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எட்டு மாணவர்களும் ஒரு காவலாளியும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் மேலும் 6 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செர்பிய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இன்று காலை, தாக்குதல் தொடர்பில் மத்திய பெல்கிரேடில் உள்ள விளாடிஸ்லாவ் ரிப்னிகர் பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது மாணவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் தனது தந்தையின் துப்பாக்கியைப் பயன்படுத்தியே குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply