பாகிஸ்தானில் பாடசாலை ஆசிரியர்கள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான கைபர் பக்துங்குவாவில் உள்ள பாடசாலை ஒன்றில் இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 ஊழியர்கள் உயிரிழந்ததோடு, இருவர் காயமடைந்துள்ளனர்.

உயர்நிலைப் பாடசாலையில் பரீட்சை முடிந்தத நண்பகல் வேளையில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் இறந்தவர்களும் காயங்களுக்குள்ளனவர்களும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்தவர்களில் ஐந்து பேர் அந்தப் பாடசாலையின் ஆசிரியர்கள் எனவும் மூன்று பேர் துணை ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply