துனிசியாவில் யூத மத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு!

ஒவ்வொரு ஆண்டும் வருடாந்தப் புனித யாத்திரையின்போது ஐரோப்பா மற்றும் இஸ்ரேலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் செல்லும் துனிசியாவின் டிஜெர்பாத் தீவில் உள்ள வழிபாட்டுத் தலம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் தாக்குதல்தாரி உட்பட நால்வர் கொல்லப்பட்டனர்.

குறித்த வழிபாட்டுத் தலத்தில் பலர் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்ட காவலாளி ஒருவர், இரண்டு சக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இரண்டு பேரைச் சுட்டுக் கொன்றதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காவலரிடம் பிணைக்கைதிகளாகச் சிக்கிய மக்களை 4 மணி நேரத்தின் பின்னர் பொலிஸார் பாதுகாப்பாக மீட்டனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய காவலாளி சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply