கிணற்றில் தவறி விழுந்து இரண்டரை வயதுக் குழந்தை சாவு!

யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த
இரண்டரை வயது குழந்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையின் தந்தை, வேலைநிமித்தம் வெளியே சென்ற நிலையிலும், தாயார் குழந்தையைத் தனியாக விட்டு வீட்டுவேலைகளைச் செய்த நிலையிலும், வீட்டுக்கு அருகாமையிலுள்ள கிணற்றுக்குள் குழந்தை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இறந்த குழந்தையின் சடலம் தெல்லிப்பழை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, நேற்று  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply