ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் காட்டுத் தீ- 21 பேர் உயிரிழப்பு

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்குண்டு ஏறக்குறைய 21 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யாவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள கூர்கானில் திடீரெனப் பரவிய காட்டுத் தீயால் 300ற்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின.

குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Sverdlovsk மாகாணத்திலும், சைபீரியாவின் Omsk மற்றும் Dumen மாகாணங்களிலும் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்புப்களில் தீ பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக  தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply