கனடாவின் அல்பர்டாவில் காட்டுத்தீ!

கனடாவின் அல்பர்டாவில் கடந்த வியாழக்கிழமை திடீரெனப் பரவிய காட்டுத்தீயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளை விரைவாக முன்னெடுக்குமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அல்பர்டாவில் இந்த ஒரு மாதத்தில் மட்டும், நூற்றுக்கும் அதிகமான இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் இதுவரையில், முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தற்காலிகமாக இடம்பெயர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply