எதிர்ப்புக்கு மத்தியிலும் கடமைகளை பொறுப்பேற்கிறார் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட  பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நேற்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

லஞ்ச ஊழல் பெருச்சாளி திருமதி சார்ள்ஸ் ஆளுநருக்கு எதிரான போராட்டம் – எனும் தொனியில் குறித்த இப்போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தின் போது ”லஞ்ச ஊழலை வளர்க்காதே, ஊழல்வாதிகளை காப்பாற்றாதே, தமிழினத்தை அழிக்காதே, தமிழ் கலாசாரத்தை சிதைக்காதே, ஆளுநர் அலுவலகத்தை விட்டு வெளியேறு” போன்ற கோசங்களுடன் போராட்டம் இடம்பெற்றது.

எவ்வாறாயினும், எதிர்ப்புக்கு மத்தியிலும் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply