மதுபானசாலைகளுக்கு பூட்டு..! வெளியான அறிவிப்பு

பொசன் போயா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை அநுராதபுரத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொசன் போயா தினத்தை முன்னிட்டு, அநுராதபுரம் புனித நகரை பிரதானமாகக் கொண்டு எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை பொசன் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply