கயானா தீ விபத்துக்கான காரணம் வெளியானது

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு கயானா பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது.

குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் கைத்தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து,  மாணவி தற்கொலை செய்ய முற்பட்டபோதே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தத் தீ விபத்தில் 19 பாடசாலை மாணவர்கள் இறந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவியும் மேலும் பலரும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கயானாவில் 3 நாட்களை துக்க தினமாக அனுட்டிக்குமாறு அந்த நாட்டு ஜனாதிபதி பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.

T01

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply