தபாலில் அனுப்பப்பட்ட 3 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்!

தபால் மூலம் அனுப்பப்பட்ட பொதிகளில் 3 கிலோகிராம் 475 கிராம் “குஷ்” என்ற போதைப்பொருள் இலங்கை சுங்கத்தின் மத்திய தபால் பரிவர்த்தனை பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த போதை பொருளின் மொத்த பெறுமதி 3 கோடியே 47 இலட்சம் ரூபா என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து பொரலஸ்கமுவ, வெள்ளவத்தை, மினுவாங்கொட, வெலிசர, நுவரெலியா மற்றும் தலங்கம ஆகிய இடங்களில் உள்ள முகவரிகளுக்கு சுமார் 10 பொதிகள் தபால் மூலம் அனுப்பப்பட்டன.

இந்த பொதிகளை பெற அவற்றின் உரிமையாளர்கள் முன்வராததால், கடந்த 16 ஆம் திகதி காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், அஞ்சல் துறை அதிகாரிகள் முன்னிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையிலேயே குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்து போதைப்பொருள் கையிருப்பு காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply