5 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி! பார்க்கப் படையெடுக்கம் மக்கள் (படம்)

வவுனியா பாலமோட்டை பகுதியில் உள்ள கோவில்குஞ்சுக்குளம் கிராமத்தில் அண்மையில் மாடு ஒன்று 5 கால்களுடன் கன்று ஒன்றினை ஈன்றுள்ளது.

பாலமோட்டை கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம் ஞனேஸ்வரன் என்பவர் வளர்த்து வந்த மாடு ஒன்றே இவ்வாறு கன்று ஈன்றுள்ளது.

இதேவேளை, குறித்த கன்று தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதற்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் நேற்று கன்றினை பார்வையிட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கால்நடை வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கிராம மக்கள் சென்று அதிசய கன்று குட்டியை ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply