யாழ் சுண்டுக்குளி பகுதி விடுதியில் கலாசார சீரழிவு! இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்களும் விடுதியின் முகாமையாளரும் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும், அதன் ஊடாக அங்கு கலாசார சீரழிவுகள் இடம்பெறுவதாகவும் யாழ்ப்பாண காவல்துறையினருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறை குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.

இதன்போது, உரிய பதிவுகள் இன்றி விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தனி அறைகளில் தங்கி இருந்த தெகிவளைப் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களையும் விடுதியின் முகாமையாளரையும் அவர்கள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் முகாமையாளரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply