இந்தியாவில் பொது இடத்தில் வைத்து மாணவி கொலை – இளைஞன் கைது

இந்தியத் தலைநகர் டெல்லியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 16 வயது பெண் தோழியைப் பொது இடத்தில் வைத்துக் கத்தியால் குத்திக் கொலைசெய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 20 வயது இளைஞனை டெல்லிப் பொலீஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர், உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்திற்கு அருகில் வைத்துக் கைதுசெய்யப்பட்டதாகவும் கைதுசெய்யப்பட்டவர் 20 வயதான சாஹல் என்னும் பெயருடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவி பிறந்தநாள் விழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் இருவருக்கிடையிலும் ஏற்பட்ட தகறாறே கொலைக்கான காரணம் எனப் பொலிஸார் தெரவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ளன.

மேலும், சம்பவத்தின்போது பலர் அவ்விடத்தில் குழுமி இருந்தமாகவும், மாணவிக்கு உதவிட யாரும் முன்வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை டெல்லி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply