பாதாள உலகக் குழு பாபாவின் நண்பர் கைது!

பாபா என அழைக்கப்படும், குற்றவாளியான கலுஹாத் நதீஸ்குமார அப்ரூவின் நெருங்கிய நண்பர் என சந்தேகிககப்படும் நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதுடைய சந்தேகநபர், நேற்று இரவு மருதானை அஹங்கல்ல பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வைத்து விசேட அதிரடிப்படையினரின் திடீர் சுற்றிவளைப்பின் போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டபோது ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, துப்பாக்கிச் சன்னங்கள், 50 கிராம் ஹெரோயின் போன்றவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக அஹங்கல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply