பளைப் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பளைப் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்துள்ளதாகப் பளை மக்கள் தெரிவித்துள்ளனர்.

பளைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும், இதனால் குறித்த கிராமமே மூழ்கிப்போகும் அபாயத்தில் உள்ளதாகவும் பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சட்டவிரோத மணல் அகழ்வினால் குறித்த பகுதியில் கடல் நீர் உட்புகும் அச்சத்தில் உள்ளதாகவும், குறித்த விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டபோதிலும், அது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆகவே, பளைப் பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தி தருமாறும் மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply